Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Ajith and Venkat Prabhu spotted in a theater HQ

Ultimate Star Ajith Kumar who is working day and night for his landmark 50th film Mankatha was spotted with the movie's director Venkat Prabhu at a popular theater in North Madras. Soon after the message was leaked, huge number of crowd gathered to watch their onscreen idol in live action.

According to the guess works it was a theater scene in Maknatha which involved the lead star Ajith. The crowd was managed by the security officials and the movie crew members. Despite of the huge crowd Venkat Prabhu managed to complete the shoot within the scheduled time.

Mankatha has been planned for May release and for this, Ajith and Venkat are streching day and night to get the project completed on time. Mankatha is produced by Cloud None movie and has Yuvan Shankar Raja scoring music for it.

I am ready for the race: Bharadwaj

Music composer Bharadwaj is happy about the way films are being made in Kollywood of late. “Some young filmmakers are showing enormous promise and their movies are setting new trend,” he says.
The 75-film old music director, whose songs in Ajith starrer ‘Aasal’ went on to top charts early last year, says movies like ‘Kalavani’ and ‘Mynaa’ impressed him a lot. “Both are top class films,” he says.
Eager to work with aspiring young directors, Bharadwaj says, “I strongly believe that the young wave which is currently ruling Tamil cinema will certainly change things here. I am ready for the race.”
Meanwhile, he has floated Bharadwaj School of Music, through which music classes would be taught to students. “Courses are designed keeping in mind the taste of youngsters and the needs of the industry,” he says.

Viewsonic VX2255wmb Nvidia 9400GT DVI corrupt - xxxxxxxxx

Bloody windows, now my monitor is locked thinking its DVI is asleep and wont work, only in VGA mode. Ok so its not actually a WIndows 7 error, either graphics driver or monitor.

So my monitor will now only work in VGA analog and not DVI digital, as it wont even recongnise the monitor on DVI and its a standard non PNP in analog cos the edid is corrupt and it thinks the DVI is sleeping. Monitor cost me enough and its less than 2 bleeding years old, sent the last one back with exactly the same

"கூகிள் வரலாறு"

"கூகிள் வரலாறு"
Google ஒரு பிரபல்யமான தேடு பொறியாகும் இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப் படுகின்றது.
Google 1996ம் வருடம் ஜனவரி மாதம் ,லாரி பேஜ்(Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியா விலுள்ள ஸ்ரான்பெஃர்ட்(stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பு (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு)இன் முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜ் இன் ஆராச்சிக்கான விடையமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடையம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணனியின் திரையில்) கொடுப்பதை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராச்சிக்கு புனைபெயராக 'பாக்ரப்' (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின் புல இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி "ராங்டெக்ஸ்" (rankdex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட்(stanford) பல்கலைக்கழக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு Google தோன்றவும் அடிகோலினர்.
ஆரம்பத்தில் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைகழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்க்காக google.stanford.edu என்ற பெயர் பாவிகப்பட்ட போதிலும் பின்னர் google.com என 1997 ம் வருடம் செப்ரம்பர்15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 ம் வருடம் செப்ரம்பர் 15ம் நாள் Google தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.1998ம் ஆண்டு செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் car grageல் Google வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர். மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக googol.com என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்
(googol என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப் பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை.).எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "Google" என்ற புதிய சொல். car grageல் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999 ம் மார்ச் மாதம் சிலிக்கன்-பள்ளத்தாக்கு(Silicon Valley) இற்கு மாற்றலாகின.அங்கு வெவ்வேறு இரு இடங்களில் Google இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்ரு. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி googleplex எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை Google கொள்முதல் செய்தும் கொண்டது.
Google தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து Google சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும்,இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும்(click) விகிதத்திலும் விற்க்கப் படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். (goto.com என்ற இதன் பெயர் overtrue services வாகவும் பின்நாளில் Yahoo! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்ரிங்" ஆயிற்று.). கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக
வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்"(googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்"(Google) என்பது மிக பிரபல்யம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்பேஃர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது.' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி(google search) தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி (PageRank mechanism) காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.

Google பங்குச் சந்தை வருகை

கூகிள் தேடுபொறி 1998 செப்ரம்பர் 7இல் அமெரிக்காவின் கலிபோஃர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் விஷேட பங்குவகிக்கும் Google, 2004ம் ஆகஸ்ட்டு மாதம் 19ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916ம் முழுநேர வேலையாட்கள் (2007ம் செப்ரெம்பர் 30ம் கணக்கெடுப்பின் படி)பணியாற்றுவதுடன் இதுவே "நாஸ்டாக்"(NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும். லாரி பேர்ஃஜ் ,சேர்ஜி பிரின் இனால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் பங்குச்சந்தையில் வந்த 2004ம் ஆக்ஸ்ட்டு 19ம் அன்று $1.67 பிலியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக Google நிறுவனம் மதிப்பாகியிருந்தது. படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்தி விஸ்த்தரிப்பு, இணைய மின்-அஞ்சல், இணையவழி வரைபடம், அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி வீடியோவையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்!" ("don't be evil" இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் இலச்சனையில் பலவித கண்கவர் யுக்திகளை விஷேச தினங்களில் "Google Doodles" வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.

மூலதனமும் பங்குச் சந்தையும்

முதலாவது முதலீடாக ஒரு இலட்சம் டொலர்களை "சண்மைக்கிரோ"(SunMicrosystem)இன் ஸ்தாபகர்களில் ஒருவர் மூலம் மட்டுமே பெற்றனர் என்பதுடன், அப்போது Google நிறுவனம் தோன்றி இருக்கவுமில்லை. இந்த முதலீட்டின் பின் 6 மாதங்கள் சென்ற நேரத்தில் பல முதலீட்டாளர்கள் முதலிட முன் வந்தும் இருந்தனர். அத்துடன், 2003ம் ஒக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகிளை எடுத்துச்செல்ல ஆலோசிக்கும் வேளை "மைக்கிரோ சொப்ற்"(MicroSoft) புகுந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடமற் போயிற்று. ஜனவரி 2004இல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான "மோர்கன் ஸ்ரான்லி"(Morgan stanley) ,"கோல்மான் சாச்ஸ்" (Goldman Sachs) இனால் பங்குச் சந்தையில் சேர்வதற்கான ஏற்பாடு தொடங்கபட்டது. பங்குச் சந்தையில் முதல்நாள் சேரும் வேளை $4 பில்லியன்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர். இதனிடையே கூகிளானது 2004ம் மேமாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்மானை வெட்டி விட்டு வேறொரு பிரபல்யமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004ம் ஆகஸ்ட்டு 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்தபோது ஒவ்வொரு பங்கும் $85க்கு விற்க்கப்பட்டது. முதல் நாள் மொத்தமாக கைமறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது உத்தேசிக்கப்பட்ட அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும், அன்று கூகிளின் இரட்டையர்கள் தம்வசம் 271 மிலியன் பங்குகளை வைதிருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர். அத்தோடு கூகிளில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் கடதாசி டொலர் மில்லியனர்கள் ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய "யாகூ" ( yahoo! 8.4 மில்லியன் Google பங்குகளை நஸ்டஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் கூகிளின் பங்குச் சந்தை வருகையின்10 நாள் முன் உடன் பட்டன.) ஐயும் ஆக்கியிருந்தது. இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005ம் யூன் மாதம் கூகிள் நிறுவனம் $52பில்லியன்கள் (பங்குகள் தவிர $7பில்லியன்கள் பணமாக) மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப்பெரிய பெறுமதியுள ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று. தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007ம் ஒக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டுள்ளது.

சுவீகரிப்பு, கூட்டுக்கள்.

கூகிள் பெப்ரவரி 2003இல் weblog இன் முன்னோடியும் "புளக்கர்"(blogger) இன் சொந்தக் காரரான "பைரா லாப்ஸ்"(Pyra Labs)ஐ சொந்தமாக்கிற்று. உலக இணையத் தளத்தின் 84.7 விகிதமான தேடுதல்களை 2004ம் முற் பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ(YAHOO!), ஏஓஎல்(AOL), சிஎன்என்(CNN) ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செய்திருந்தது, பின்பு 2004ம் பெப்ரவரி இல் யாகூ விலகிக் கொண்டு தனது சொந்த தேடுபொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்ட விடயம் கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் G-mail,orkut, மற்றும் புதிய பல யுக்திகிள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால (40வருடம்) ஆராச்சிக்கான "நாஸா"(NASA)இன் கூட்டு 2005ம் செப்ரம்பரிலும் (இந்த கூட்டு ஆய்விற்கான கட்டிடத்தின் பரப்பளவு 11இலட்சம் சதுர அடிகள் அல்லது 42ஏக்கர்களாகும்.), இணையத்திற்கான கூட்டு "ஏஓஎல்"(aol) லுடன் டிசெம்பர் இலும் உருவாக்கிக் கொண்டது. மேலும், "சண்மைக்கிரோ" உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகிள் நிறுவனம் தனது ஊளியர்களை "ஓப்பிண் ஆபிஸ்"(OpenOffice.org) நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004கும் 2006ம் வருட இறுதிக்கும் உள்ள காலகட்டத்தில் பல மென்பொருள் முன்மாதிரி நிறுவனங்களையும்(Trendalyzer,Upstartle,AdscapeMedia) ரேடியோ விளம்பர நிறுவனம் "டிமார்க்"(dMarc)ஐ தம் வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை "மை ஸ்பேஸ்"(MySpace) உடன் செய்தனர். கூடவே, 2006இன் இறுதி காலத்தில் "யூ ரியூப்"(You Tube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தள வீடியோ $1.65 பில்லியனிற்கு கூகிளினால் கொள்முதலானது, இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த "ஜொற்ஸ்பொற்"(JotSpot)ம் சொந்தமாக்கப்பட்டது. இத்துடன் நிற்காமல் 2007ம் ஏப்ரலில் $3.1பில்லியன் கொடுத்து "டபள் கிளிக்"(Double Click)
ஐ கொள்முதல் செய்ததோடு 2007ம் யூலை 9இல் "பொஸ்டினி"யும் கொள்முதல் செய்து கொண்டது. இத்தனைக்கும் மத்தியில் தனது பரம எதிரியான 'மைக்கிரோ சொப்ற்'(MicroSoft) இன் பல திறமை உள்ளவர்களையும் தம்வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் வெளியே இரகசியமாக 2005ம் டிசெம்பர் 22ல் தீர்த்தும் கொண்டது. கூகிள் நிறுவனம் 2006ல் ".mobi" எனப்படும் கைத்தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரண கர்த்தாவாகவும், முதலீடு இட்ட நிறுவனமாகவும் முன்நிலை படுத்தியதோடு 'கூக்ள்-மோபி' இன் சொந்தக் காரருமாகவும் கூகிள் உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

நன்கொடை

2004ல் இலாபம் ஈட்டாத "கூகிள்.ஓர்யி"(Google.org)ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1பிலியன் வைப்பு செய்யப்பட்டது. இந் நிறுவனத்தின் முன்நிலை கவனிப்புக்களாக சூழல் வெப்பமாகுதல் தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைகும் திட்டம் டாக்டர்.லாரி தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.

முடிவு உரை

இந்த கட்டுரை அமெரிக்காவின் பொருளாதார வீழ்சி முன்னதாக உள்ள தகவல்களின் அடிப்படையில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். பொருளாதார நிலைமைகள் பாதகமகவுள்ள போதிலும் கூகிள் பல வேலைத்திட்டங்களையும் முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக மினியல் புத்தக நூலகம் (80 இலட்சம் புத்தகங்களை இயந்திர உதவியுடன் மணிக்கு 3000 பக்கம் வேகத்தில் scan செய்யப்படுகின்றன.) வேகமாக உருவாகிவருகின்றது. மேலும், இது போன்ற கட்டுரை மொழி பெயர்ப்புக்கள் இன்றி தன்நியக்க English-Tamil வெகு விரைவில் வரவும் உள்ளது. எனவே, அறிவுத்தாகம் தீர்க்க ஒரு "கூகிள்" நண்பன் கிளம்பிவிட்டான் என்று கூறி அன்புடன் நிறைவுசெய்கிறேன்.

Source: http://www.google.com/corporate/history.html ,

என்ன தான் இருக்கிறது ChromeOSல்?

முதலாவதாக இப்போது கிடைக்கும் க்ரோம் பதிப்பு ஒரு முழுமையான பதிப்பு அல்ல. ஆல்பா பதிப்பு என்று அழைக்கப்படும் முதல் சோதனை பதிப்பு. இது நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்ததல்ல.

#1. இன்டர்நெட் இணைப்புடன் மட்டுமே இது செயல்படும்.

#2. உங்களின் டெஸ்க்‌டாப் கணினியில் இது இயங்காது. (You need VMWare)

#3. விலை மலிவாக கிடைக்கும் Notebook (Laptop அல்ல) ல் மட்டுமே இயங்கும்.

#4. உங்களின் அனைத்து Files & Data இன்டர்நெட்ல் உள்ள கூகல் Server ல் மட்டுமே சேமிக்கப்படும்.

Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட

நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும் நடுவில் பிரச்சினையை ஏற்ப்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என்று இங்கே பார்ப்போம்.

  • இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை.
  • முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
  • இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும்.
  • இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் ‘&fmt=18′ (Stereo, 480 x 270 resolution) இந்த வரியை கொடுக்கவும்.
  • அல்லது ‘&fmt=22′ (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
(OR)
  • உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து டைப் செய்யவும்.
  • நீங்கள் தேடும் வீடியோக்களில் இந்த தரங்களில் வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும் இல்லையேல் NO VIDEOS FOUND என்ற செய்தி தான் வரும். அதற்க்கு கீழே தரம் குறைந்த வீடியோக்கள் வரும் அதில் பார்த்து கொள்ளவும்.

கூகுல் $750 மில்லியன் கொடுத்து வாங்கப்படும் பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்ட நிறுவனம்.


கூகுள் நிறுவனம் $750 மில்லியன் டாலர் விலைக்கு AdMob என்ற மொபைல் விளம்பர சேவை நிறுவனத்தை வாங்கி உள்ளது. 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஒரு பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்டது.

மொபைல் தொழில்நுட்பம் மிகவும் வளராத காலத்தில் பல இன்னல்களை சந்தித்து வளர்ந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. iPhoneன் வரவுக்குப் பின்பு பல நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

AdMobஐ வாங்குவதன் மூலம் ஒரு நல்ல மொபைல் விளம்பர வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளம்பர தொழில்நுட்பத்தை கூகுள் வாங்குகிறது.

பேஸ்புக்குக்கும்,ட்விட்டர்கும் சவாலாக கூகுள் வண்டு (Buzz)

தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzz)

முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான்.

மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.

இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது 'Buzz' என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.

உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம்.

இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்த சீனாவிலிருந்து நிபுணர்கள் குழு வருகை

அரசின்
நாச வேலைகள் குறித்து உண்மைகளை அம்பலப்படுத்தும் இணையத் தளங்களையும் அரச
எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களையும் சைபர்
தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்று வருகிறது.

இதன் ஒரு கட்டமாக இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சீன நிபுணர் குழுவொன்று சிறிலங்காவிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரசித்தி
பெற்ற கூகிள் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொண்டு சீனாவில்
அவற்றைச் செயற்படாமல் தடுத்த சீன நிபுணர்களே இவ்வாறு சிறிலங்காவிற்கு
வந்துள்ளனர்.

இணையத்தளங்களைத் தடைசெய்யும் நோக்கம் எதுவும் இல்லை
என்று அரசு கூறி வந்த போதிலும் திரைமறைவில் இந்த நடவடிக்கைகள் துரித
கதியில் நடந்து வருவதையே சீன நிபுணர்களின் வருகை உணர்த்துவதாக ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.

இளமையாகத் தோன்ற ஆசையா?

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:-

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

கண்ணில் கருவளையம் மறைய...

சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

முகத்தை பாதுகாக்கும் முறை:-

ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
உதடு உலர்ந்து விட்டதா?

உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

கழுத்தில் உள்ள கருவளையம் மறைய:-

சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல:-

இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.

காது அழகை பராமரிப்பது எப்படி?

பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்... காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.

ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.

உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.

சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.

ஆசை முகம் அழகாக வேண்டுமா?

இந்த நவீன காலத்தில் முகம் பேணுவது முக்கியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டிக்கொண்டு முகப்பொலிவைச் செய்கின்றனர். இதற்கான அழகு மையங்கள் ஆங்காங்கே போட்டி போட்டுக்கொண்டு முளைக்கின்றன. ஆனால் மருத்துவ ரீதியாக இவைஎல்லாம் தங்களின் தோலுக்கு ஒத்து வருமா ஒத்துவராதா என்ற சிந்தனை இன்னும் தோன்றவில்லை.

பலபேர் தங்களின் கரடுமுரடான முகத்தை அழகு செய்ய விரும்பினாலும் கூடுதல் செலவு, மற்றும் பக்க விளைவுகள் கருதி அதனைச் செய்யப் பயப்படுகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி நல் முகம் ஆக்க மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தோல் நோய்ப்பிரிவு முகப்பொலிவு சிகிச்சையைத் துவங்கியுள்ளது.

உலகின் எந்த நவீன சிகிச்சை தொடங்கப் பெற்றாலும் அதற்கான கருவிகளை உடன் வாங்கி மக்களுக்கான எளிய மருத்துவச் சேவைகளைத் தொடர்வது மீனாட்சி மிஷன் மருத்துவமனை.

அந்த வகையில் அண்மையில் இறக்குமதி செய்யப் பட்ட மக்களின் முக நன்மைக்கு வகை செய்யும் முகப்பொலிவு சிகிச்சை கருவி தான் டெர்மாபரேடர் என்பது.

முக அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வழிவது. கருவளையங்கள் இருந்து அசிங்கம் காட்டுவது. இதனால் இளமையானவர்கள் முதியவராகத் தோற்றம் காட்டுவது போன்றவற்றைத் செய்யும். இதேபோல் பலருக்கு பருவ காலத்தில் முகப்பரு ஏற்பட்டிருக்கும்.

அது தணிந்து சரியாக ஆறி இருந்தாலும் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பொதுவாகவே முகப்பருத்தழும்புகளைத் தடுப்பது மிகவும் சிரமமான ஒன்று. முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

ஒரு இடத்திற்கு வேலைக்குப் போகிறவர்கள் மிடுக்கும் துடுக்கும் நிறைந்த தோற்றப் பொலிவோடு காணப்படவேண்டும். இது போன்ற முகப்பரு தழும்புள்ளவர்கள் பலர் இது போன்ற நேரங்களில் மனம் சங்கடப்படுவர்.

இவர்களின் மனச் சோர்வைப் போக்கும் வண்ணம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் தோல் நோய்ப் பிரிவில் முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை நடந்து வருகிறது. இதன் மூலம் மிகவும் ஆபத்தான குழித்தழும்புகள் உள்ளவர்கள் கூட அவர்களே பெருமைப்படும் வண்ணம் முகப் பொலிவை உண்டாக்கலாம்.

Co2 laser மற்றும்... மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை முகச் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை சரி செய்து வருகிறோம்.

ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் இல்லாமல் கூட செய்யலாம். இதனை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் வெயிலினால் ஏற்படும் மாற்றம் மற்றும் எண்ணெய் வடிவதை குறைந்து முகத்தில் மசாஜ் செய்வதுடன் முகத்தையும் பொலிவு பெறச் செய்யும்.

இதன் முக்கியச் செய்தி என்னவென்றால் இதனை ஒரு முறை செய்தவுடன் உடனடியாக முகத்தைத் தடவிப்பார்த்தாலே முக வித்தியாசத்தை நன்றாக அறியலாம். சென்னை மற்றும் மும்பைப் பகுதியில் நடிகர் நடிகைகள் மட்டுமே செய்து கொண்ட இந்த சிகிச்சை இப்போது உங்கள் மீனாட்சி மிஷன் மருத்துவ மனையிலும் நடைபெறுகிறது. இதில் சென்னை, மும்பையை விட இங்கு செலவு குறைகிறது.

முகத்தில் ஆசை வைத்தவர்கள் அனைவரும் தங்களின் ஆசை முகத்தை மேலும் அழகாக்கிக் கொள்ள எம்மை நாடலாம்.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

கருப்பான பெண்கள் நிறமாக மாற


கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....?

பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.

பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.

காய்கறி பேஷியல்

முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.

வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

உடல் எடை குறைய


மிக பெரிய பிரச்சனை மற்றும் மன அழுத்தத்தை தருவது குழந்தை பிறந்தப்பின் அம்மாக்களுக்கு ஏற்படும் உடல் பருமன். குழந்தை பேறு என்பது ஒரு தாய்க்கு அடுத்த பிறவி என்பார்கள். குழந்தை பேற்றால் நம் உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் முதலில் இருப்பது நம் உடலின் எடை. மிக சிலர் மட்டுமே எப்போதும் போல் இருப்பார்கள், அதற்கு குடும்பவழி காரணமாக இருக்கலாம். ஆனால் 99% பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். அதற்கான காரணங்கள் :-

1. இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றங்கள்

2. குழந்தையை கவனிப்பதில் நம்மை நாம் கவனித்துக்கொள்வதில்லை

3. குழந்தைக்காக நன்றாக சாப்பிடவேண்டும் என்று சாப்பிட்டு சாப்பிட்டே நம் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகிவிடுகிறது.

4. அதிகமான உடல் உழைப்பு இல்லாமல் போவது.


அடிவயிற்று சதையை மட்டும் குறைக்க (குறிப்பாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்) வீட்டிலேயே செய்யும் எளிதான உடற்பயற்சிகளை குறிப்பிடுகின்றேன். இதை செய்யவதற்கு முன்


1. உடற்பயற்சி செய்யும் போது, மிகவும் வேதனைப்படும் அளவு வலி இருந்தால் நிறுத்திவிடவேண்டும்.

2. வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு செய்யக்கூடாது. திட உணவு சாப்பிட்டு குறைந்த பட்சம் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். திரவ உணவு சாப்பிட்டால் குறைந்தபட்சம் 1/2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்

3. உடற்பயிற்சி முடிந்தவுடன் சாப்பாடு சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் 1/2 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.

4. தண்ணீர் நிறைய குடிக்கலாம், அதுவும் சுடத்தண்ணீராக இருந்தால் நலம்.

5. பயிற்சியின் எண்ணிக்கையை படிப்படியாக தான் உயர்த்த வேண்டும், நமக்கு வேகமாக குறைக்க வேண்டும் என்று, கடுமையாக செய்யக்கூடாது.

கீழ்கண்ட படத்தில் இருப்பது போன்று படிப்படியாக செய்து பாருங்கள்.



1. தரையில் விரிப்பு ஏதாவது போட்டு நேராக படுத்துக்கொள்ளுங்கள்

2. இடது காலை மட்டும் மெதுவாக மேலே தூக்குங்கள். முடிந்தவரை தூக்கிவிட்டு இறக்கிவிடுங்கள்.

3. அடுத்து வலது காலை மெதுவாக மேலே தூக்குங்கள். மெதுவாக இறக்கிவிடுங்கள்.

இதை வேகமாக செய்யக்கூடாது, மிகவும் மெதுவாக செய்யவேண்டும். அப்போது தான் தசைகளுக்கு நல்லது.

இதில் படம் 2, 3 ல் காட்டியுள்ள உடற்பயிற்சிகளை மட்டும், முதலில் ஒரு 5 முறை மேலே தூக்கி இறக்குமாறு எண்ணிக்கை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களும் சேர்ந்து மொத்தம் 10 முறை. இதனை குறைந்தபட்சம் 7 நாட்கள் தொடர்ந்து செய்துவாருங்கள். 5 என்ற எண்ணிக்கை 10 ஆக்கி கொள்ளலாம். உங்களால் நன்றாக சுலபமாக வலியில்லாமல் கால்களை தூக்கி இறக்க முடிந்தவுடன், படம் 4 ஐ முயற்சி செய்யுங்கள்.

4. இரண்டு கால்களையும் ஒரு சேர மெதுவாக தூக்கி, ஒரு சேர மெதுவாக இறக்குங்கள். இப்படி தினமும் உங்களால் முடிந்த அளவு விடாமல் செய்து வந்தால் அடிவயிற்று சதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டிப்பாக குறையும்

5. எப்போது உடற்பயற்சி செய்தாலும் கடைசியில் ஒரு நிமிட அளவு உடலில் எந்த அசைவும் இல்லாமல், கண்களை மூடி அப்படியே படுத்து இருந்துவிட்டு எழுந்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக படம் 6 இல் காட்டி இருப்பது போல் எப்போது எல்லாம் தரையில் உட்காருகிறீர்களோ அப்போது எல்லாம் கால்களை குத்திட்டு, கைகளால் இறுக்கி உடம்போடு அழுத்தி உட்காருங்கள். இதை டிவி பார்க்கும் போது செய்யலாம். உட்காரும் போது எல்லாம் இப்படி உட்கார்ந்து பழக்கப் படித்துக்கொண்டால், அடிவயிற்று சதை குறையும். இதை தனியாக உடற்பயிற்சியாகவும் செய்யலாம். ஆனால் மிக எளிதாக செய்ய முடியும் என்பதால் முடியும் போது எல்லாம் செய்யுங்கள்.

நாம் உட்காரும் போது சோபா, சேர் என்று உட்காராமல், தரையில் உட்கார்ந்து எழுந்து பழகலாம், அதுவுமே ஒரு உடற்பயற்சி தான்.

இப்படி உடற்பயிற்சிகள் எல்லாம் என் குழந்தைக்கு 5 வயது ஆகும் போது தான் நான் ஆரம்பித்தேன். அதுவரையில் எனக்கு அதன் தேவை இல்லாமல் இருந்தது, அதற்கு பிறகு நடைபயிற்சி. இது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 -3 கிமி நடந்து செல்லுவேன். பள்ளிக்கு குழந்தைக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல நடந்தே சென்று வருவேன். இரண்டு சக்கர வாகனம் இருந்தாலுமே உபயோகப்படுத்தாமல் இருந்தேன். நடப்பதினால் என் உடல் பருமன் ஏறாமல் இருந்தது.

வீட்டில் டிரட் மில் இருந்தால், குறைந்த பட்சம் 10 நிமிடமாவது பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை உடலுக்கு தேவையான பயிற்சியையும், உங்களை எப்போதும் Active ஆக இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் மன உறுதியோடும், நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.

ஒரே வாரத்தில் குண்டாக, ஒல்லியாக தரப்படும் சிகிச்சைகள்

"ஒரே வாரத்தில் குண்டாக வேண்டுமா? ஒல்லியாக வேண்டுமா?' - பஸ் மற்றும் ரயில் நிலையங்கள், சிறுநீர் கழிக்கும் இடங்கள் என, தலைநகரில் துவங்கி சிறு நகரம் வரை அனைத்து சந்து, பொந்துகளிலும் ஆக்கிரமிக்கும், "பிட்' நோட்டீஸ்களின் வாசகங்கள் இவை. வளரும் தொழில்நுட்பத் துக்கு ஏற்ப, எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் வரை இந்த விளம்பரங்கள் விரவியுள்ளன.

காலை உணவாக "மேகி' பின் கடித்துக் கொள்ள கொஞ்சம் பப்ஸ்; மாலை சைடு டிஷ் பானிபூரி; மயக்கம் வந்தால் குளிர்பானம் என்று, உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் பிரதிபலிப்பே, இது போன்ற நோட்டீஸ்களின் பெருக்கத்திற்கு காரணம். சாப்பிட, தூங்க, உடற்பயிற்சி செய்ய, குடும்பத்தையோ, தன்னையோ கவனித்துக்கொள்ள நேரமில்லாமல் வேகமாய் ஓடும் நகர வாழ்க்கையில், நம் உடலோடு வியாதிகள் எளிதாக விருப்பக் கூட்டணி அமைத்து விடுகின்றன. சென்னையில் பெருகியுள்ள .டி., நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் இயல்பு வாழ்க்கையே தலைகீழாகிவிட்டதால், உடல் பருமனில் துவங்கி, பெயர் சொல்ல முடியாத வியாதிகள் எல்லாம் அவர்களை வாட்டி வருகிறது.

இந்த மாறுபட்ட பழக்க வழக்கங்களால், அதிகளவு குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ மாறுகிற குறைபாடு, பெரும்பான்மையானவர்களுக்கு ஏற்படுகிறது. இவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, சில தனியார் மருத்துவ மையங்கள் சென்னையில் செயல்படுகின்றன. இந்த பாதிப்பில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், கிளி ஜோதிடம் பார்ப்பவர்கள் போல், சிகிச்சையளிக்கும் "விசேஷ' மருத்துவ மையங்களின் எண்ணிக்கையும் தெருவெங்கும் பரவிக் கிடக்கிறது. இவர்களது கவர்ச்சி விளம்பரங்களைக் கண்டு, மக்கள் சிகிச்சைக்காக அங்கு செல்கின்றனர். அப்படிச் செல்பவர்களுக்கு இதுபோன்ற மருத்துவ மையங்கள் மூலிகைப்பவுடர்கள் கொண்ட மருந்துப் பொருட்களோ அல்லது "கேப்சூல்'களோ கொடுக்கிறது. அதற்காக குறைந்தபட்சம் 400 ரூபாயிலிருந்து பல ஆயிரம் வரை, கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

......to be continued.



முகப் பொலிவுக்கு சில டிப்ஸ்...

  • முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.
  • பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
  • பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும்.
  • பொடுகுத் தொல்லை,​ ஹார்மோன் பிரச்னை,​ நகத்தினை வளர்த்தல்,​ முறையற்ற உணவுப் பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வெளிப்படையான பயன்பாடுகளைப் பொறுத்த வரையில் தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும்.
  • குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
  • தண்ணீர் நிறைய பருக வேண்டும்.
  • முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

​இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம். எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதர சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது.

இதில் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் நிலை பரவாயில்லை. இவர்களுக்கு பெரும்பாலும் முகப்பருக்கள் வருவதில்லை.

  • வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்.
  • முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு இரசாயனத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது.
  • அதுபோல எலுமிச்சைச் சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.
  • சந்தன பவுடர் கடைகளில் கிடைக்கும். அதனைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது.
முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும்.

அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்

நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?

அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள் தருவது நல்லதென்று கருதுகிறேன்.

காலை உணவைத் தவிர்க்காதீர்!

பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!

காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்

வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்

டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

பகல் நேரத்தில் தூங்குவது மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது

பகல் நேரத்தில் தூங்குவது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற கருத்து பரவலாக உள்ளது. தற்போது பகலில் சிறிய தூக்கம் போட்டால் மூளையின் செயல்பாடு அதிகரித்து அறிவு திறன் வளரும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கான ஆய்வை பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். தொடக்கத்தில் இவர்கள் 39 பேரிடம் ஆய்வை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் அவர்களை நன்றாக தூங்கவைத்து விட்டு காலையில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர். அதே வேளையில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிட நேரம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தனர்.

இவர்கள் இருதரப் பினரின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது. இதில், பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைசெயல்பாட்டு திறன் அதிக அளவில் இருந்தது.

இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் இதே முடிவுதான் கிடைத்தது. இந்த ஆய்வறிக்கை கலிபோர்னியாவில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது.

CD Cutter வேண்டுமா?


நன்பர் 2009kr எனது எளிமைய DVD Cutter பதிப்பை பர்த்துவிட்டு இதேபோன்று CD Cutter வேண்டும் என கூரினார் அவருக்காக இந்த பதிப்பை சமர்ப்பனம் செய்கி்ரேன் .

முதலி இந்த தளத்திக்கு சுட்டி சென்று CD/VCD Cutter-யை Download செய்து Install பன்னவும்.



அதன் பின் மேலே உள்ளது போன்று தோன்றும் இப்பொது உங்களுக்கு தேவையான படத்தை Open செய்துகொள்ளவும் . இனி படத்தை ஒடவிடவும் .





இப்போது நாம் எந்த இடத்தில் இருந்து வெட்ட வேண்டும் என நினைக்கிரோமோ அந்த இடம் வறும் போது Mark Start என்ற பட்டனை அலுத்தவும் .

இதேபோன்று முடியும் இடம் வறும் போது Mark End பட்டனை அலுத்தவும்.

கடைசியாக Save பட்டனை அமுக்கவும். இனிமேல் நாம் வெட்டிய காட்சியை பார்க்கலாம்.


குறிப்பு :-

இவற்றை Install செய்ய முடியவில்லை என்றால் எனது அடுத்த Portable VCD Cutter பதிப்பை பார்க்கவும்.....

கணினி முலம் இலவசமாக SMS அனுப்ப

என்னை கவர்ந்த எளிமையான இரண்டு தளங்கள்

1.160by2


இவற்றில் Sinup செய்வது மிக மிக எளியது.மேலும் இவற்றின் முலம் குறுப்பிட்ட நாடுகளுக்கு இலவசமாக அனுப்பலாம்



Sinup செய்ய இங்கு செல்லவும் சுட்டி

2.way2sms



இதில் Google/Yahoo chat வசதி உள்ளது மேலும் Group sms செய்வது மிக மிக எளியது

sinup செய்ய இங்கு செல்லவும் சுட்டி

கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...

பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.

இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.

உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )

இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .

வினாடியில் கணினி அணைந்து விடும்.

[x]

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites