நீ காற்று நான் மரம்

ஊரெங்கும் பனிபெய்து கொண்டிருந்த
ஒரு மார்கழி காலையில்
என் வீட்டினுள்ளே வந்து உட்கார்ந்தார்கள்
மங்கி கேப் அணிந்த அந்த இருவரும்.
அவன் புத்தகப் பையை கழட்டி ஓரம் வைத்தான்.
அவள் முதுகில் சுமந்தபடியே அமர்ந்துவிட்டாள்.
சிறிது நேரம் அமைதி காத்த இருவரும்
ஒருவரை ஒருவர் பரஸ்பரம் முறைத்துக் கொண்டனர்
'நீ அலை நான் கடல்'
என்று பாடினான் அவன்.
'கடல் இல்ல, நான் கரை'
என்று சிரித்தாள் அவள்.
என்னிடம் கேட்டபோது
கரைதான் என்றேன்.
'அய். நான் தான் ரைட்டு என்று சத்தம் போட்டாள்.
அவன் அடுத்து தேன் தேன் தேன் என்றான்.
இருவரும்
காற்றாக மாறிக் கொண்டிருந்தார்கள்
நான் மரமாகி தலையாட்டிக் கொண்டிருந்தேன்

0 comments:

Post a Comment

[x]

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites